மரண விளைச்சல்!!!

திடீரென யாரும் அறியாமல்
திடீரென......

ஏனிந்த அவசரம் ஏனோ
ஏனோ

ஆரவாரம் ஏதுமின்றி திக்விஜயம்
அக்னிதேவன்

காலன் வருகை பராக்
பராக்

மாடியிலே மகேஸ்வர தரிசனம்
மாணவர்களுக்கு

மரணம் ஒத்திகையின்றி அரங்கேற்றம்
குடந்தையில்

கச்சிதமாக மிக கச்சிதமாக
அவசரமாக

மலரும் வேளையிலே கருகிய
மொட்டுகள்

கொத்துக் கொத்தாக பொசுங்கிய
உடல்கள்

அதிர்ச்சியில் உறைந்தார் பெற்றோர்
மற்றோர்

நூற்றுமேனிக்கு சற்று குறைவாக
மரணவிளைச்சல்

இனியொரு கும்பகோணம் கூடாது
கூடாது.

0 மறுமொழிகள்: